வெற்றிக் கதைகள் 1
எங்களுக்கு பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது, அவர் தான் மயிலாடுதுறையை சேர்ந்தவரென்றும் தன் அண்டை வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவள் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறினார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த 27 வயது பெண்ணை கவனிப்பதற்கு அவருடைய வயதான தந்தையாலும் சிறுவனாக இருக்கும் தம்பியாளும் இயலவில்லை எனக் கூறினார். அந்தப் பெண்ணுக்கு தகுந்த தங்கும் வசதி, மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை கொடுக்க வேண்டும் என வேண்டினாம். நாங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கும், ஒருங்கிணைந்த மையத்திற்கும் பாதிக்கப்பட்டவருக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்யுமாறு விண்ணப்பித்தோம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அந்தப் பெண்ணை காப்பாற்றி சீர்காழியில் இருக்கும் கார்டன் மென்டல் ஹெல்த் கேர் சென்டரில் சேர்த்தனர்.